உலக சாம்பியன்ஷிப் போட்டி! 4-வது முறையாக தங்கம் வென்ற லத்தீப்!

top-news
FREE WEBSITE AD


ஜப்பானில் இன்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் கோப்பை 2024 போட்டியில் தேசிய பாரா நீளம் தாண்டுதல் சாம்பியன் அப்துல் லத்தீஃப் ரோம்லி நான்காவது முறையாக உலக பட்டத்தை வென்றார்.

27 வயதான லத்தீப், தனது முதல், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது தாவல்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, டி20 (அறிவுசார் குறைபாடு) நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான தனது இரண்டாவது முயற்சியில் 7.30மீ நீளம் தாண்டினார்

தோஹா 2015, லண்டன் 2017 மற்றும் பாரிஸ் 2023 உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டிகளில்  வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஈக்வடாரின் சாலா எஸ்பினோசா மற்றும் கொலம்பியாவின் ஒபாண்டோ அஸ்பிரிலா ஆகியோர் முறையே வெள்ளி (6.95 மீ) மற்றும் வெண்கலம் (6.84 மீ) வென்றனர்.

மற்றொரு தேசிய பிரதிநிதியான சுல்கிஃபிலி அப்துல்லா 6.02 மீ தூரத்தை பதிவு செய்து 13 பங்கேற்பாளர்களில் 12 வது இடத்தைப் பிடித்தார்.

பெர்லிஸின் லத்தீப், கடந்த ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 7.40 மீட்டர் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பிறகு 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸிற்கான தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

2016ல் ரியோ டி ஜெனிரோவிலும், 2020ல் டோக்கியோவிலும் தங்கம் வென்ற பிறகு தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் நடப்பு சாம்பியனாக உள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

ewlwqh