கோலா பிலா முன்னாள் MP எடின் சயாஸ்லி ஷித் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் கோலா பிலா நாடாளுமன்ற உறுப்பினர் எடின் சயாஸ்லி ஷித் தனது 50 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
இது தொடர்பாக பெர்சாத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, எடினின் குடும்பத்தினருக்கு முகநூலில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்நாளில் அவர் அளித்த அர்ப்பணிப்பான சேவை மற்றும் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, அவரது மறைவு பெர்சாத்து மற்றும் தேசத்திற்கு பெரும் இழப்பாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்,
இன்று காலை 7.10 மணிக்கு நெகிரி செம்பிலானின் புக்கிட் சேடாங்கில் உள்ள அவரது வீட்டில் எடின் காலமானதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

அவரது மரணத்தை நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான்  நேஷனல் தலைவர் ஹனிஃபா அபு பேக்கர் உறுதிப்படுத்தினார்.
எடின் 2018 மே முதல் நவம்பர் 2022 வரை குவாலா பிலா எம்பியாக இருந்தார்.

டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் அவர்  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துண அமைச்சராகப் பதவி வகித்தார்.
முஹைதின் யாசினின் ஆட்சிக் காலத்தில் பிரதமர் துறையின் துணை அமைச்சராகப் பதவி வகித்த அவர், பின்னர் பொதுப்பணித்துறை துணை அமைச்சராகப் பணியாற்றினார்.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சராகவும் எடின் இருந்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *