RM 50 ஆயிரம் மோசடி! முன்னாள் கோயில் தலைவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஏப் 4: சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலின் முன்னாள் தலைவர், கோயில் நிதியிலிருந்து 50,000 ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

70 வயதுடைய சம்பந்தப்பட்ட அந்த நபர், வியாழக்கிழமை அன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர், மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மற்றொரு நபருடன் கூட்டு சேர்ந்து, ஒருபோதும் மேற்கொள்ளப்படாத கோயில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக 50,000 ரிங்கிட் மதிப்பிலான ஆலோசனை சேவைகளுக்கு ஒரு விலைப்பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

தற்போது விசாரணைகள், 1950-களில் நிறுவப்பட்ட அந்தக் கோயில் மற்றும் அதன் முக்கிய நிதி ஆதாரங்களான இந்து பக்தர்களின் நன்கொடைகள் மீது கவனம் செலுத்துகின்றன.

அக்டோபர் 2024-ல் சங்கங்களின் பதிவு இலாகாவால் அந்தக் கோயிலின் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும், சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் அரசு நிலத்தில் அந்தக் கோயில் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *