ரொட்டியில் புழு... அதிர்ச்சியில் பயனீட்டாளர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4: இங்குள்ள  தனியார் நிறுவத்தினால் தயாரிக்கப்பட்ட தவ் சார் பியா என்னும் ரொட்டியைப் பயனீட்டாளர் ஒருவர் வாங்கிச் சாப்பிடும்போது அந்த ரொட்டியின் உள்ளே புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக  தமிழ் மலரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட சுகாதாரத் துறையிடம் புகார் வழங்கப் போவதாகவும் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த ரொட்டி பாக்கெட் மீது காலாவதியாகும் தேதியும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக அதிரடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரா மாநில சுகாதாரத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தலைமையில் மாநிலத்தில் செயல்படும் சாலையோர உணவகங்களை அண்மையில் சோதனை செய்தபோது அசுத்த உணவு காரணமாக சில கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *