RM 667, 729 மதிப்புள்ள 20 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

கோத்த கினபாலு, ஆகஸ்ட் 5: சபா மண்டல அரச மலேசிய சுங்கத் துறை கடந்த ஜூலை 30 ஆம் தேதி, 667,729.44  என மதிப்பிடப்பட்ட 20 கிலோகிராம் மெத்தாம்பெத்தமைனைக் கைப்பற்றியது.

இரண்டு தனித்தனி இடங்களில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக சபா மண்டல சுங்கத்துறை உதவி இயக்குநர் சித்தி மாங் கூறினார்.

தாவாவ் விமான நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கும், கோத்த கினாபாலு சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 1 மணிக்கும் அவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

அதே நாளில் KKIA மற்றும் Tawau விமான நிலையத்தில் 18 மற்றும் 29 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *