மாஸ்கோ ட்ரோன் தாக்குதல் - மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: மலேசியாவின் வெளியுறவு அமைச்சு, மாஸ்கோவில் உள்ள அதன் தூதரகம் மூலம், மாஸ்கோவில் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பாக  உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  நிலைமையை தாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும்  மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாஸ்கோவில் உள்ள மலேசிய தூதரகத்துடன் தொடர்பைப் பேணுங்கள் என்று அந்த அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *