காஸாவிற்கான மனிதாபிமான பயணத்தை ஒத்திவையுங்கள்! - அன்வார் அறிவுறுத்தல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 3: காசாவிற்கு மனிதாபிமானப் பயணத்திற்காகப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசிய ஆர்வலர்கள் தங்கள் திட்டங்களை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நடந்தது போல, இஸ்ரேலிய ஆட்சியால் அவர்கள் தடுத்து வைக்கப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் (ஜிஎஸ்எஃப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின்) தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, (இப்போதைக்கு) இப்பணியை இடைநிறுத்துவது புத்திசாலித்தனம் தாம் நினைப்பதாக அவர் கூறினார்.

 மறு பேச்சுவார்த்தை நடத்தவும் மறுசீரமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

முக்கியமான விஷயம் உயிர்களைக் காப்பாற்றுவது. சில நேரங்களில் நாம் வரம்புகள் இல்லாமல் ஹீரோக்கள் போல் பேசுகிறோம். எல்லோரும் ஒரு ஹீரோவாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அடக்குமுறை ஏற்கனவே 65,000 பாலஸ்தீனியர்களின் உயிர்களைக் கொன்றுவிட்டது என்று அவர் இன்று பந்தாய் டாலாமில் உள்ள அல்-கதிஜா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலால் கொடூரமாக ஒடுக்கப்படும் பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவதும், மனிதாபிமான உதவி மற்றும் உணவை வழங்குவதும் இப்போது அனைத்து தரப்பினரின் பொறுப்பு என்று அன்வர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *