என் அம்மாவுக்காகப் பச்சை குத்தினேன்... அதைப் பார்க்கக் கூட அவர் இல்லையே! – மகனின் உருக்கம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 28: ஜாலான்  மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கிய தனது தாயைத்மீட்கும் நடவடிக்கையின் முடிவுக்காக காத்திருக்கும், அவரது மகன் சூர்யாவின் உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

கையில் அவரது தாயின் பெயரைப் பச்சை குத்திய சூர்யாவுக்கு இப்போது அது கசப்பான நினைவாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

25 வயதான சூர்யா, சமீபத்தில்தான் தாய்லாந்தில் விடுமுறையின் போது தனது தாயின் பெயரான விஜயலெட்சுமி என்ற பெயரை  இடது கையில் பச்சை குத்தியதாக பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் தனது 48 வயது தாயிடம் பச்சை குத்தியதைப் பற்றி பேசியதாக அவர் கூறினார்.

அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய குரலில் இருந்த மகிழ்ச்சியை என்னால் கேட்க முடிந்தது என்று சூர்யா கண்ணீர் மல்கக்  கூறினார்.

  “என் அம்மாதான் எனக்கு எல்லாமே.  நான் செய்யும் அனைத்தும் அவளுக்காகத்தான்... அதனால்தான் நான் பச்சை குத்த முடிவு செய்தபோது, ​​​​அவள் பெயர்தான் முதலில் என் நினைவுக்கு வந்தது” என்று அவர் கூறினார்.

என் தாயாருக்காக என் கையில் நான் போட்ட பச்சையை என் அம்மா பார்க்காமல் போனது வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை அவரிடம் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கதறிப் பேசினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *