பகாங் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா RM 10,000 பிரதமர் வழங்கினார்!

top-news
FREE WEBSITE AD

அலோர் காஜா, ஜூன் 11: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஜாலான் குவாந்தான்-சிகாமட், ரொம்பின், பகாங்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 40,000  வெள்ளி நிதியுதவி வழங்கினார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 வெள்ளியை  நன்கொடையாக  பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் நேரடியாகச் சென்று.வழங்கினார்.

தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதோடு, மிகவும் கடினமான சோதனைக்கு உள்ளான குடும்பங்கள் மீது பிரதமரின் மற்றும் அரசாங்கத்தின் அக்கறையின் அடையாளமாக இந்த பங்களிப்பு இருப்பதாக ஷம்சுல் இஸ்கந்தார் கூறினார்.

விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுவதில் அயராது உழைத்த அனைத்து மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அன்வார் தெதிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *