மோட்டார் சைக்கிளோட்டி கவலைக்கிடம்! கிள்ளானில் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தியவரால் நிகழ்ந்த சோகம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 14: கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கிள்ளானில், எதிர் திசையில் சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து பெர்சியாரன் கோத்தா சாலையில் அதிகாலை சுமார் 12.30 மணியளவில் நிகழ்ந்ததாக கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறினார்.

போர்ட் கிள்ளானிலிருந்து ஷா ஆலம் நோக்கி பெரோடுவா பெஸ்ஸா காரை ஓட்டிச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், தவறான பாதையில் நுழைந்து, 3.5 கி.மீ. தூரம் வரை எதிர் திசையில் தொடர்ந்து பயணித்து, சரியான பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலின் விளைவாக, 20 வயது மதிக்கத்தக்க அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அவரது உடல் மற்றும் வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்டவருக்கு கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கார் ஓட்டுநருக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது ஆரம்பக்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்று லிம் கூறினார். இதனை அடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *