மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி காயம்!

top-news
FREE WEBSITE AD


மலாக்கா:  இன்று மதியம் இங்குள்ள பண்டார் ஹிலிரில் மரம் சாய்ந்து  மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் சாலையில் கிடந்த மின்கம்பத்தின் கேபிளில்  மோட்டார் சைக்கிள் ஏறியதில் மோட்டார் சைக்கிளோட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

மரம் சாலையின் குறுக்கே மின் கம்பத்தைச் சாய்த்துக்கொண்டு விழுந்ததில், புரோட்டான் சாகா கார் மீது மின்கம்பம் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 40 வயதான பாதிக்கப்பட்டவர் கீழே விழுந்த கேபிளில் மோதி காயமடைந்தார்.  அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கார் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *