உங்களைப் பாதுகாக்கும் பிரதமர் உங்களுக்கு இருக்கிறார்... உங்கள் வேலையைச் செய்யுங்கள்! - அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் வாக்குறுதி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 11: அரசு ஊழியர்களின் கடமைகளை நிறைவேற்றும்போது கேள்வி கேட்பவர்களுக்கு எதிராகப் பாதுகாப்பேன் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் சிறப்பாகவும் பொறுப்புடனும் செய்யும் வரையில், அரசு ஊழியர்களைக் கேள்வி கேட்பவர்களின் அழுத்தங்களுக்கு தாம் அடிபணிய மாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்குத் தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும், அவர்கள் நல்லது மற்றும் சரியானதைச் செய்யும் வரை, அவர்களைப் பாதுகாப்பேன் என்றும் அவர் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கான தனது ஆணை தெளிவாக உள்ளது: அவர்கள் தங்கள் பணிப் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

“உங்களைப் பாதுகாக்கும் பிரதமர் உங்களுக்கு இருக்கிறார். நான் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டேன். நீங்கள் (அரசு ஊழியர்கள்) உங்கள் வேலையைச் செய்யுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *