தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி - பிரேமலதா விஜயகாந்த்!

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது என குற்றாலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். இந்த சுற்றுப் பயணத்தில் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம், குற்றாலம் வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி.

சென்னையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதில், தொடா்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.தோ்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரம் வரும்போது தலைமை கழகம் அறிவிக்கும். தொண்டா்கள் விரும்பும் கூட்டணியாக அமையும். எங்களுக்கு எல்லா கட்சிகளும் தோழமை கட்சிகள்தான்.

உரிய நேரத்தில் தெளிவான முடிவை அறிவிப்போம். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாள்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியா்களின் பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *