Kl மர பராமரிப்புக்காக நான்கு ஒப்பந்ததாரர்கள்!

top-news
FREE WEBSITE AD

தலைநகரில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் மரம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நான்கு ஒப்பந்ததாரர்களை நியமிக்க கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான டிபிகேஎல் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

லெம்பா பந்தாய் எம்.பி.யாக இருக்கும் ஃபஹ்மி,  கோலாலம்பூர் மேயர் கமாருல்ஜமான் மாட் சாலேவை சந்தித்து, விவாதித்ததாக கூறினார்.

மர பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நான்கு ஒப்பந்ததாரர்களை ஒதுக்கும் DBKL-ன் திட்டங்களை கமருல்ஜமான் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரைப் பசுமையாக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப, வெட்டப்படும் ஒவ்வொரு 'அதிக ஆபத்துள்ள' மரத்திற்கும் 100 மரங்களை நட வேண்டும் என்ற பிரதமரின்  அழைப்பிற்கு DBKL செவிசாய்க்கும் என்றும் ஃபஹ்மி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *