நான்கு முன்னணி அணிகள் களம் காணும் மலேசிய கிண்ண அரையிறுதி ஆட்டங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,டிச.27-

2024/2025 ஆண்டுக்கான மலேசிய கிண்ண போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.ஜொகூர் டாருல் தக்ஸிம் அணி திரெங்கானு அணியுடன் அரையிறுதி சுற்றில் மோதுகிறது

மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்ரீ பஹாங் அணி, சபா அணியுடன் மோதுகிறது. மலேசிய கிண்ணத்தின் நடப்பு சாம்பியனாக ஜொகூர் அணி விளங்குகிறது.

ஜொகூர்- திரெங்கானு இடையிலான ஆட்டம் கடுமையானதாக விளங்கும் என்று திரெங்கானு பயிற்றுநர் பட்ருல் அஃப்ஸான் கூறினார். இருப்பினும், ஜொகூர் அணியை வீழ்த்த தங்களுக்கு போதிய பயிற்சிகளும் ஆட்டமும் உள்ளதாக அவர் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *