இஸ்மாயில் சப்ரி ஊழல் வழக்கில் சிக்கிய RM 169 மில்லியன் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
- Shan Siva
- 01 Oct, 2025
கோலாலம்பூர், அக் 1 : முன்னாள்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர்
அனுவார் யூனுஸ் ஆகியோருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் RM169 மில்லியன் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அமர்வு நீதிமன்றம் இன்று
உத்தரவிட்டது.
மலேசிய லஞ்ச ஊழல்
தடுப்பு ஆணையமான MACC-யின் விண்ணப்பத்தை
நீதிபதி சுசானா ஹுசின் அனுமதித்தார்.
கடந்த மாதம்
வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு இருந்தபோதிலும், எந்த மூன்றாம்
தரப்பினரும் பணத்தை கோர முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.
MACC சட்டம் 2009 இன் பிரிவு 41(1) இன் கீழ் விண்ணப்பதாரரின் (MACC)
பறிமுதல் விண்ணப்பத்தை
நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார்.
அனுவார்
வைத்திருந்த நிதி இஸ்மாயிலுடன் தொடர்புடையது என்றும், MACC சட்டத்தின் பிரிவு 36(2) இன் கீழ் ஒரு
குற்றத்துடன் தொடர்புடையது என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, ஜூலை 7 ஆம் தேதி MACC
பறிமுதல் விண்ணப்பத்தை
தாக்கல் செய்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



