பினாங்கு ஜெலுத்தோங்கில் தீயில் வீடு எரிந்து நாசம்! எழுவர் உயிர்தப்பினர்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜூன் 17: ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் இன்று காலை ஜெலுத்தோங்கின் தாமான் டேசா பெனாகாவிற்கு அருகிலுள்ள அவர்களின் வீடு தீயில் எரிந்ததில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்து காலை 9.02 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் தளபதி அஸெலன் ஹாசன் கூறுகையில்,

இச்சம்பவத்தில்  உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும், இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன, உயர் இரத்த அழுத்தம் உள்ள 39 வயது பெண் மற்றும் அவரது 54 வயது சகோதரர் சிறிய காயங்களுக்கு ஆளாகினர் என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *