Love Scam மோசடி! 1.98 மில்லியனை இழந்த பெண்மணி!!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப்டம்பர் : சிலாங்கூரில், 64 வயதான  ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர்,  லவ் ஸ்கேம் மோசடிக்குப்  பலியாகி, 19 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் அண்மைய காலம் வரை ஒரு பார்சலை மீட்டுக்கொள்வதற்காக,  12 அறியப்படாத வங்கி கணக்குகளுக்கு 12 பரிவர்த்தனைகள் செய்ய சமபந்தப்பட்ட நபர் வற்புறுத்தப்பட்டதை அடுத்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக, சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

இதனை அடுத்து, நேற்று மாலை 4.10 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

இதுபோன்ற காதல் மோசடிகளுக்கு எளிதில் பலியாக வேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் தெரியாத நபர்கள் மற்றும் அறிமுகமானவர்களை மகிழ்விக்கவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்றும் ஹுசைன் ஒமார் கார் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *