பங்களாதேஷிலிருந்து மலேசியர்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை! - முகமட் ஹசான்

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூலை 22: பங்களாதேஷின் டாக்காவில் இருக்கும் 124 மலேசிய மாணவர்கள் உட்பட மலேசிய குடிமக்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரு வெளியேற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, அந்த நாட்டில் பலர் கொல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறைக் கலவரங்களைத் அடுத்து, மலேசியர்களை அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பும் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அந்நாட்டில் தீர்க்கப்படாது. எனவே மலேசிய குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளதாக அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஏர் ஏசியா ஏ330  சிறப்பு விமானம் நாளை காலை 10 மணிக்கு டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

139 மாணவர்கள் பங்களாதேஷில் இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், 15 பேர் ஏற்கனவே பத்திரமாகத் திரும்பிவிட்டதாகவும் முகமட் ஹசான் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *