அரசு ஊழியர் சம்பள உயர்வு!- மலேசிய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21: அரசு ஊழியர்களுக்கான சமீபத்திய சம்பள உயர்வுக்கு மலேசிய மருத்துவ சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதில் பொதுச் சுகாதார நிபுணர்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

பொது அமைப்பில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிப்பதில் இந்தச் சரிசெய்தல் குறிப்பிடத்தக்க படியாகும் என்று அதன் தலைவர் டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் கூறினார்.

இந்த ஊதிய உயர்வு ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்றாலும், எங்கள் சுகாதார அமைப்பை மேம்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் நலனைத் திறம்பட மேற்பார்வையிட, பொதுச் சேவைத் ஆணையத்திடமிருந்து சுயாதீனமான ஒரு சுகாதார சேவைகள் ஆணைக்குழுவின் தேவை இருப்பதாக அவர் நினைவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *