கசிவுகள் மூலம் இழந்த RM 15.5. பில்லியனை அரசு மீட்டது ஒரு சாதனை! - அன்வார்
- Shan Siva
- 06 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 6: கடந்த இரண்டு ஆண்டுகளில் கசிவுகள் மூலம் இழந்த 15.5 பில்லியன் ரிங்கிட் தேசிய வருவாயை மீட்டெடுத்தது, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் மத்தியில் மக்களுக்கான அரசாங்க மானியங்களைத் தக்கவைக்க உதவியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், தேவைப்படும் மக்களுக்குத் திருப்பி அனுப்புவதற்காகப் பணத்தை மீட்க அரசாங்கத்திற்கு உதவியுள்ளன என்றும் அவர் கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்கள் மற்றும் அது தொடர்பான உதவிகளுக்காக அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட RM6 பில்லியன் செலவாகிறது என்றும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்ந்தால் இந்தத் தொகை அதிகரிக்கக்கூடும் என்றும் அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



