பகடிவதை விவகாரத்தில் அரசாங்கம் சமரசம் செய்யாது! - அன்வார்
- Shan Siva
- 18 Aug, 2025
புத்ராஜெயா, ஆக 18: பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பணியிடங்களில் பகடிவதை கொடுமைகளை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அழைப்பு விடுத்தார்.
பிரதமர் துறையின் மாதாந்திர
கூட்டத்தில் பேசிய அவர், உடல் மற்றும்
உளவியல் ரீதியான துஷ்பிரயோக விஷயத்தில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்று கூறினார்.
இந்தக் கலாச்சாரத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். ஒன்றாம் படிவ மாணவி ஜாரா
கைரினா மகாதீர் மற்றும் தஹ்ஃபிஸ் மாணவர் வான் அகமது ஃபரிஸ் வான் அப்துல் ரஹ்மான்
ஆகியோரின் அண்மைய மரணம் உட்பட பல சம்பவங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



