கோவிட் -19 புதிய வகை திரிபு! கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது சிலாங்கூர்!

top-news
FREE WEBSITE AD


சிலாங்கூர்  மாநிலத்தில் கோவிட் -19  புதிய திரிபு வகை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக சிங்கப்பூரில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையுடன் தமது தரப்பு இணைந்து  இவ்விவகாரத்தை அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் புதிய திரிபு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை  இதுவரை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, எப்போதும் தங்களின் பாதுகாப்பை பொதுமக்கள் உறுதி செய்து கொள்ளும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொள்வதோடு,  நெரிசலான இடங்களில் முகக் கவசத்தை அணியுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரில் தொற்றுநோய் இரட்டிப்பாகியதைத் தொடர்ந்து கோவிட் -19 நோய்த் தொற்றின் புதிய அலையை தாங்கள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை    கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

**

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *