விஷம் கலந்த பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!

top-news
FREE WEBSITE AD

சுக்காய், ஜூலை 14: சுக்காயில் ஒரு பண்ணையின் வேலியில் கண்டெடுக்கப்பட்ட விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில், கம்போங் ஆயிர் பூத்தே பகுதியைச் சேர்ந்த அச்சிறுவன், ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.

பண்ணையைக் கடந்து சென்ற சிறுவன், பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கெட்டை சாப்பிட்டுவிட்டு, சரிந்து சுயநினைவை இழந்ததாக அவர் கூறினார்.

சிறுவன் அவனது நண்பனின் தந்தையால் மயக்கமடைந்த நிலையில் தரையில் கண்டெடுக்கப்பட்டான்.

பின்னர் அவசர சிகிச்சைக்காக கெமாமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு,  அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *