அமெரிக்க சுதந்திரதின விழாவைப் புறக்கணிக்க வேண்டும்! - கைரி வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD


அமெரிக்காவின் 248-ஆவது சுதந்திரத் தின விழா, வரும் ஜூன் 10 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், மலேசியாவில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் அமெரிக்க சுதந்திர தின நிகழ்வில் மலேசிய  அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகளை ஒற்றுமை அரசாங்கம் அனுப்ப வேண்டாம் என்றும்,  அழைப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் பிரதமருக்குத் தனது இன்ஸ்டாகிரெம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ராஃபா தாக்குதல் குறித்த அமெரிக்க அதிபரின் நிலைப்பாடு மற்றும் அவரது அறிக்கை குறித்து விமர்சித்த கைரி,  இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதை அமெரிக்க நிறுத்து வேண்டும் என்று வலியுறுத்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *