மரம் விழுந்து நசுங்கிய சிறுவன்! பொந்தியானில் பரிதாபம்
- Shan Siva
- 16 Jul, 2025
ஜொகூர் பாரு, ஜூலை 16: பொந்தியானில் ஒரு பாலத்தில் ஓய்வெடுக்கும்போது எண்ணெய் பனை மரம் விழுந்து நசுங்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவன் சம்பவ
இடத்திலேயே இறந்துவிட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷோஃபி தையிப் தெரிவித்தார்.
சாங்லாங்கின் பாரிட்
கட்டிக்கில் வடிகால் பணிகளை மேற்கொண்டு வந்த தனது நண்பருடன் சிறுவன் சென்றதாகவும்,
அருகிலுள்ள பாலத்தில் ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தபோது மரம் விழுந்து நசுங்கி இறந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்ததாக அவர் கூறினார்.
எந்த தவறும்
சந்தேகிக்கப்படவில்லை, மேலும் இந்த
வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



