கவனக்குறைவே விரைவு பேருந்து விபத்துக்குக் காரணம் – காவல்துறை
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
ஜொகூர் பாரு, மார்ச் 9-
கவனக்குறைவான ஓட்டமே விரைவு பேருந்து ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்திற்கான ஆரம்ப காரணம் என போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு ஜொகூர் பாருவில் உள்ள ஜொகூர் பாரு – ஆயிர் ஹித்தாம் சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் இடம்பெற்றது. சம்பவத்தில் 62 வயதுடைய உள்ளூர் ஆண் ஓட்டுநர் இயக்கிய விரைவு பேருந்து, 51 வயதுடைய உதவி ஓட்டுநர் மற்றும் ஒன்பது பயணிகள் பயணம் செய்திருந்தனர்.
ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்ததாவது, விபத்து நேரத்தில் அந்த பேருந்து குவாலாலம்பூரில் உள்ள தெர்மினல் பெர்செபாடு செலாத்தான் (TBS) நிலையத்திலிருந்து ஜொகூர் பாருவின் லார்கின் பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
பேருந்து கூலாய் நோக்கி செல்லும் யு-டர்ன் வழித்தடத்தில் நுழைந்தபோது, வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் பின்னர் சாலையோர பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்துக்கான காரணத்தை உறுதி செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



