எஞ்சினில் தீப்பொறி... அவசரமாகத் தரையிறங்கிய MAS

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20: 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோலாலம்பூருக்கு வரவேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) விமானம், இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு MH199 விமானம் புறப்பட்டதாகவும், ஆனால் அவசரமாக தரையிறங்குவதற்காக திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் இருந்து தீப்பொறிகள் வெளியேறியது என்பது புரிந்து கொள்ளப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற MH199 விமானம் புறப்பட்ட பிறகு இன்ஜின் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனையால் ஹைதராபாத் திரும்பியதை MAS உறுதிப்படுத்தியது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *