பிரமுகர்களைப் பாதுகாக்கும் அதிகரிகளுக்கு சிறப்புப் பயிற்சி!
- Shan Siva
- 02 Sep, 2025
கோலாலம்பூர், செப் 2: பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, தேசியத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஞாயிற்றுக்கிழமை பேராக் மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது ஒரு பெண்
சுல்தான் நஸ்ரினை நோக்கி ஓடிய சம்பவத்திற்குப் பிறகு, சுல்தான்கள் மற்றும் ஆளுநர்கள் உட்பட அனைத்துத் தலைவர்கள்
மற்றும் நாட்டுத் தலைவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்று
தேசிய காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
அரண்மனை மற்றும்
மாநில அரசாங்கங்களில் பணியாற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை
பிரிவு மற்றும் கமாண்டோ பயிற்சியின் கூறுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு
படிப்புகளை மேற்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



