மலேசியா சிங்கப்பூர் எல்லை சுங்கச் சாவடியில் கைகலப்பு! இருவர் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Sep, 2025
செப்டம்பர் 29,
சுங்கச் சாவடியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பான காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறை கைது செய்திருப்பதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் நுழைவாயில் சுங்கச் சாவடியில் நிகழ்ந்ததாக Raub Selamat தெரிவித்தார்.
கைகலப்பில் ஈடுப்பட்ட 28 வயது e-hailing ஓட்டுநரும் 43 வயது தனியார் பேருந்து ஓட்டுநரும் காயங்களுக்குள்ளான நிலையில்
மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்டிருப்பதாக தென் ஜொகூர்
மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். சுங்கச் சாவடியில் பேருந்து
நுழைவாயிலில் e-hailing ஓட்டுநர் நுழைந்ததால் பேருந்து ஓட்டுநர்
கோபமடைந்து e-hailing ஓட்டுநரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த இரு ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub
Selamat தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



