கைப்பேசி பயன்படுத்திய லாரி ஓட்டுநரைத் தாக்கிய காவல்துறை!

- Sangeetha K Loganathan
- 01 Jun, 2025
ஜுன் 1,
லாரி ஓடுநர் ஒருவரைக் காவல் அதிகாரிகள் சரமாரியாகத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடமும் காவல் அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக KEMAMAN மாவட்டக் காவல் ஆணையர் Mohd Razi Rosli தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளான 30 வயது லாரி ஓட்டுநர் கடந்த வெள்ளிக் கிழமை மாலை Chukai காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தாக்குதலை நடத்திய காவல் அதிகாரியையும் அவரின் நண்பர்களையும் விசாரித்து வருவதாகவும் KEMAMAN மாவட்டக் காவல் ஆணையர் Mohd Razi Rosli தெரிவித்தார்.
லாரி ஓட்டுநர் கைப்பேசியைப் பயன்படுத்தியபடியே லாரியைச் செலுத்தியதால் காவல் அதிகாரி கண்டித்ததாகவும் விடுமுறையில் இருந்த காவல் அதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பானக் காணொலில் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் KEMAMAN மாவட்டக் காவல் ஆணையர் Mohd Razi Rosli தெரிவித்தார்.
Seorang pemandu lori mendakwa dipukul oleh individu termasuk anggota polis selepas ditegur kerana menggunakan telefon ketika memandu. Polis Kemaman menjalankan siasatan susulan laporan dan video tular insiden itu yang mencetuskan kebimbangan orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *