மலேசிய பெட்ரோலை தாய்லாந்துக்கு காரில் கடத்த முயன்ற நபர் கைது!

top-news
FREE WEBSITE AD


பாடாங் பெசார், ஜூன் 30: மானிய விலையில் மலேசிய பெட்ரோலை காரில் கடத்த முயன்ற தாய்லாந்து நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

53 வயதான நபர் , தனது பழைய Mercedes-Benz இல் மாற்றியமைக்கப்பட்ட தொட்டியில் 80 லிட்டர் பெட்ரோலைக் கடத்த முயன்றபோது பிடிபட்டார்.

குடிநுழைவுத்துறை, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் எல்லைச் சோதனைச் சாவடியைக் கடக்கும் போது அவர்கள் பிடிபட்டதாக பெர்லிஸ் சுங்கத் துறை இயக்குநர் இஸ்மாயில் ஹாஷிம் இன்று தெரிவித்தார்.

இதனை அடுத்து கிளந்தான் எல்லைக்கு அருகில் உள்ள 48 பெட்ரோல் நிலையங்களை RON95 கடத்தல் குறித்து கண்காணிக்க உள்நாட்டு வர்த்தக அமைச்சு உத்தரவிட்டுள்ளது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *