6 வார குழந்தையை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாகாணம், நாக்வில்லே பகுதியில் வசித்து வருபவர் மார்க். இவரின் மனைவி க்ளோ மன்சூர்.தம்பதிகளுக்கு பிறந்த ஆறு வாரங்களாகும் எஸ்ரா மன்சூர் என்ற கைக்குழந்தை இருக்கிறது.

இவர்களின் வீட்டில் செல்லப்பிராணியாக ஹஸ்கி நாய் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடுமையாக கடித்துக்குதறியது.

இதனால் படுகாயமடைந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், ஒருவாரமாக உயிருக்கு போராடி வந்த பிஞ்சு குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *