பேராக்கில் விமான விபத்து! இருவர் காயம்!

top-news



சுங்காய், ஃபெல்டா குனுங் பெசவுட் 2 தம்பஹானில் உள்ள எண்ணெய் பனை தோட்டப் பகுதியில் இன்று இலகுரக விமானம்  விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் காலை 9.55 மணியளவில் நிகழ்ந்ததாகவும்,, செஸ்னா 172N ஸ்கைஹாக் விமான ரகம் என்று அறியப்படும் அவ்விமானத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி மற்றும் மலேசியாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம்  இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினர்.

 இச்சம்பவம் குறித்து இன்று காலை 9.46 மணிக்கும் மலேசிய தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாகவும்,
உடனே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களான கேப்டன் ஷாருல் இம்ரான் மற்றும் லீ ஹோ ஜியா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *