வீரர்களின் வெற்றியைப் பதக்கங்களால் அளவிடக்கூடாது! - துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் கொண்டு வந்த தேசிய விளையாட்டு வீரர்களின் வெற்றியைப் பற்றி மலேசியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

நாட்டின் சவாலைச் சுமந்த அனைத்து விளையாட்டு வீரர்களின் தியாகத்தையும் அங்கீகரித்து  அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டு வீரர்களின் வெற்றியைப் பதக்க சாதனைகளால் மட்டும் அளவிடாமல், அவர்கள் வெளிப்படுத்தும் போராட்ட குணம் மற்றும் கடின உழைப்பையும் கொண்டு அளவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசியா இதுவரை இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) பூப்பந்தாட்ட வீரர்களாஆண் ஆரோன் சியா-சோ வூய் யிக் (ஆண்கள் இரட்டையர்) மற்றும் செவ்வாய் (ஆகஸ்ட் 6) அன்று லீ ஜி ஜியா (ஆண்கள் ஒற்றையர்) ஆகியோரின் உதவியால்.

ஒன்பது விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 26 மலேசிய விளையாட்டு வீரர்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடுகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *