கட்சியில் பிளவுகள்.... எனவே ஓய்வு பெறவில்லை! முகைதீன் கருத்து

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18: அக்டோபரில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்து கட்சிக்குள் விரிவடைந்துவிட்டதாகத் தோன்றிய உட்கட்சிப் பிளவுகள், தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தைத் தள்ளி வைத்துள்ளதாக முன்னாள் பிரதமர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற பெர்சாத்து உச்ச மன்றக் கூட்டத்தில் முகைதீனைத் தலைவராகத் தக்கவைக்க முடிவு செய்ததாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பெர்சாத்துவுக்குள் பிரிவுகள் இருப்பது இரகசியமில்லை என்றும், இது 16வது பொதுத் தேர்தலில் கட்சி மற்றும் பெரிகாத்தான் நேஷனல்  வாய்ப்புகளை அச்சுறுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்சமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் மற்றும் துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு ஆகியோரை மையமாக வைத்து இந்தப் பிரிவுகள் உள்ளன.

2016 ஆம் ஆண்டு பெர்சாத்துவின் தலைவராக இருந்த முகைதீன், கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தனது தலைவர் பதவியைப் பாதுகாக்கப் போவதில்லை என்று கூறினார்.

24 மணி நேரம் கழித்து அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார், அவரது மனைவி நூரைனி அப்துல் ரஹ்மான் தன்னை மற்றொரு தவணைக்குப் பதவியில் இருக்க வற்புறுத்தியதாகக் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *