சிங்கப்பூர் பிரதமர் மலேசியா வருகை

top-news

கோலாலம்பூர், பிப். 19-

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த வெள்ளிக்கிழமை மலேசியாவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற தலைவர்கள் ‘பெமுகிமான்’ சந்திப்பின் முடிவுகள் தொடர்பாகவும் தொடர்ச்சியான ஆலோசனைகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

ஆசியான் அமைப்பில் மலேசியாவுக்கு அண்டை நாடாகவும், முக்கிய கூட்டாளியாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் விரிவாகவும் வலுவாகவும் இருந்து வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *