PKR எம்.பி. மீது 10 மில்லியன் லஞ்ச குற்றச்சாட்டு: முழுமையான விசாரணைக்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 26-

PKR கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சுமார் 10 மில்லியன் லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்பாக, Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) மற்றும் Polis Diraja Malaysia (PDRM) ஆகியவை உடனடியாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனலின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ  தக்கியுடின் ஹாசான் வலியுறுத்தினார்.

இந்த விசாரணை எந்தவித மறைப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும், உண்மை வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எந்தவொரு தரப்பினரின் தலையீடும் இல்லாமல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு உடனடி விளக்கம் வழங்க அரசாங்கமும், குறிப்பாக பிகேஆர் தலைமைத்துவமும் முன்வர வேண்டும் என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் PN கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை திறந்தவெளியில் நேர்மையுடன் கையாளத் தவறினால், ஊழலை ஒழிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ள உறுதிப்பாட்டில் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரம் தற்போது நாட்டின் அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *