பள்ளி வளாகங்களில் தொடர் ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள்!
- Thinagaren Sanggaren
- 16 Oct, 2025
அக்தோபர் 16,
பள்ளி வளாகங்களைச் சுற்றி காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் இருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தும் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார். பள்ளி நேரத்தில் தொடர்ந்து காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தேவை ஏற்பட்டால் பள்ளி வளாகத்திலும் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள் என Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
பள்ளிகளில் ஒழுக்கச்சீர்கேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களைப் பள்ளி நிர்வாகத்தின் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பாளர்கள் என்றும் இது தேவைகள் ஏற்படும் போது பள்ளி வளாகத்தில் காவல் அதிகாரிகள் நுழைவார்கள் என்றும் Datuk Shazeli Kahar தெரிவித்தார். பள்ளி நிறைவடைந்து பள்ளியின் வெளியே மாணவர்கள் அதிக நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் சூழல் காரணமாகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரோந்து பணியிலிருக்கும் காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



