இந்தியர்களை அவமதித்தவருக்கு மன்னிப்பு மட்டும் போதாது..... கடும் நடவடிக்கை அவசியம்! - அக்மால் சலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பி 17: இந்தியர்களைத் தவறான முறையில் சித்தரித்து அறிவிப்பு வைத்திருந்த சந்தை வியாபாரி,  மன்னிப்புக் கேட்ட போதிலும், அது போதாது என்றும், சம்பந்தப்பட்ட  அந்த வியாபாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத்  தலைவர் டாக்டர் அக்மால் சலே,
அழைப்பு விடுத்துள்ளார்.

மற்றவர்களுக்கு இது ஒரு  பாடமாக அமைய வேண்டும் என்றால், தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்மால் வலியுறுத்தினார்.

மற்றொரு இனத்தை அவமதிக்கும் நபர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும், மன்னிப்பு மட்டும் வழங்குவதன் மூலம் தப்பிவிடக்கூடாது என்று அவர் கூறினார்.

 அப்படியே விட்டுவிட்டால், புண்படுத்தும் வகையில் ஏதாவது சொல்லுதல் அல்லது செய்துவிட்டு  மன்னிப்பு கேட்கும் இந்த கலாச்சாரம் தொடரும், எனவே, உரிய நடவடிக்கை அவசியம் தேவை என அவர் விளக்கினார்.

நேற்றிரவு, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டகாங், தனது செயலுக்காக கடைக்காரர் அனைத்து மலேசியர்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறினார்.

மக்காச்சோளத்தை விற்றவர் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததாக ஆரோன் கூறினார்.

இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள்,  உள்ளூர்வாசிகள், தேசிய ஒற்றுமைத்துறை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அதிகாரிகள், காவல்துறையின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிப்பாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *