போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் பயிலும் மலேசிய மாணவர்களுக்கு மலேசியப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு!
- Shan Siva
- 17 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 17: மத்திய கிழக்கு மோதலால் வெளிநாட்டுக் கல்வி பாதிக்கப்பட்ட மலேசிய மாணவர்களை, சூழ்நிலை தேவைப்பட்டால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சேர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளில்
தங்கள் படிப்பைத் தொடர சமீபத்தில் வாய்ப்பு பெற்றவர்களும் இதில் அடங்குவர் என்று
உயர்கல்வி அமைச்சர் ஸம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
அவர்களின் தேர்வு
முடிவுகள், பாடப்பிரிவுகள் மற்றும்
கல்விப் பின்னணிக்கு ஏற்ப, அவர்கள் இங்கேயே தங்கள்
படிப்பைத் தொடர இடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்கள் அனைத்தையும்
மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் படிப்பைத் தொடர, மலேசியத் தகுதி முகமையின் வழிகாட்டுதல்களின்
அடிப்படையில், மாற்றத்தக்க வரவுகளைக்
கொண்ட பாடப்பிரிவுகளை பரிசீலிக்கும் என்று இன்று மலாக்காவில் உள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான்-ஈராக் மோதலின் போது
கூட,
மலேசியா இதற்கு முன்பும் மாணவர்களைத் திரும்ப
அழைத்து வந்து உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சேர்த்துள்ளது என்று ஸம்ப்ரி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



