கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

top-news
FREE WEBSITE AD

ஒஸ்லோ, மே 30-
நார்வேயில் அனைத்துலக சதுரங்கப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை தமிழ்நாடு சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
முதன்முறையாகக் கிளாசிக்கல் 3ஆவது சுற்றில் கார்ல்சனை  வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார்.
கார்ல்சன் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார். 
நார்வே சதுரங்கப் போட்டியில் மொத்தம் 10 சுற்றுகள் உள்ளன. முதல் 3 சுற்றுகள் முடிவில் முதலிடம் பிடித்த நிலையில் நார்வே சதுரங்கச் சாம்பியன் பட்டத்தை வெல்ல பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி வருகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *