ஜொகூர் சட்டமன்ற தேர்தல்: 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளியூர் வாக்காளர்கள் திரும்புவர் என LLM கணிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

Johor மாநிலத் தேர்தலை முன்னிட்டு, 300,000-க்கும் மேற்பட்ட வெளியூர் வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக திரும்புவார்கள் என Lembaga Lebuhraya Malaysia (LLM) எதிர்பார்க்கிறது.

இதனால், குறிப்பாக Johor நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும் என LLM தலைவர் Datuk Seri Hasni Mohammad தெரிவித்தார்.

ஜொகூருக்குச் செல்ல திட்டமிடும் அல்லது ஜொகூர் வழியாக பயணிக்கவுள்ள பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வாக்குப்பதிவு நாளில் நெடுஞ்சாலைகளில் பயணம் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, பாதை மூடல் தொடர்பான பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என Hasni Mohammad கூறினார்.

எனினும், அவசரப் பணிகள் மட்டும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், நெடுஞ்சாலை பயனர்கள் TuJu செயலி மூலம் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் என LLM அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பயணத்திற்கு முன் வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

Touch 'n Go, e-dompet மற்றும் debit card ஆகியவற்றில் போதுமான இருப்பு இருப்பதை பயனர்கள் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்றும் LLM நினைவூட்டியுள்ளது.

Johor PRN நாளில் அதிகமான வாகனங்கள் சாலையில் இருக்கும் என்பதால், மக்கள் பொறுமையுடன் மற்றும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *