சிறிய அளவிலான திட்டங்களின் செயலாக்கம் துரிதப்படுத்தப்படும் – பொருளாதார அமைச்சு உத்தரவாதம்
- Tamil Malar (Reporter)
- 08 Jan, 2026
புத்ராஜயா, ஜன. 8-
13ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான திட்டங்களின் செயலாக்கத்தை துரிதப்படுத்த பொருளாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. இதன்மூலம் வளர்ச்சியின் பயன்கள் நேரடியாக மக்களால் உணரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் கூறுகையில், இந்த நடவடிக்கை 2026 புத்தாண்டு உரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் வலியுறுத்தப்பட்டதற்கு ஏற்ப அமைந்துள்ளது. பிரதமர், சிறிய திட்டங்களை விரைவுபடுத்துவதில் அமைச்சின் பங்கை மேம்படுத்த வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டங்கள் பெரிய நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்காவிட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
“ சாலைகள், அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் விநியோகம், உள்ளூர் மேம்பாடு போன்ற திட்டங்கள் செலவில் சிறியவையாக இருக்கலாம், ஆனால் அவை மக்களின் தினசரி தேவைகளைத் தொடுவதால் தாக்கம் மிகப்பெரியது,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



