430,000 மாணவர்கள் PTPTN கல்விக் கடனைச் செலுத்தவில்லை! - உயர்க்கல்வி அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

உயர்க்கல்விக் கூட மாணவர்களுக்கானக் கல்வி கடனுதவித் திட்டமான PTPTN கடனைப் பெற்ற மாணவர்களில் 430,000 மாணவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை என உயர்க்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir  தெரிவித்தார்.

430,000 மாணவர்கள் திரும்பி செலுத்தாத கல்விக் கடனுதவித் தொகை மொத்தம் 6billion ரிங்கிட் என அவர் தெரிவித்தார். கல்விக் கடனுதவியை மீண்டும் செலுத்த வேண்டியது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்தால் போதுமானது என்றும் தங்களுடைய தம்பி தங்கைகளுக்கும் PTPTN கல்விக் கடனுதவியைப் பெறுவதை இது உறுதிப்படுத்தும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இந்த தவணைக்காக 26,534 உயர்க்கல்வி மாணவர்கள் முதல் PTPTN தொகையான RM 1,500 பெற்றதாகவும் அக்தோபர் மாதத்திற்குள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir  தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *