அமெரிக்க தூதரை வெளியேற்ற வேண்டும் – இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்துக்கு PUTRA கடும் கண்டனம்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 30-
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க தூதரை 24 மணி நேரத்திற்குள் நாடு கடத்த வேண்டும் என்று Parti Bumiputera Perkasa Malaysia (PUTRA) அரசு மீது வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் இப்ராஹிம் அலி கூறுகையில், “சுன்னி அல்லது ஷியா எனப் பொருட்படுத்தாமல் எங்கள் எதிரி இஸ்லாம்” மற்றும் “நாங்கள் ஒரு நாட்டுடன் போராடவில்லை, ஒரு நம்பிக்கை அமைப்புடன் போராடுகிறோம்” என்ற ஹெக்செத்தின் கருத்துக்கள் மிகுந்த அவமதிப்பும் இஸ்லாமோபியாவும் கொண்டதாக உள்ளன என்றார்.
இந்தக் கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.9 பில்லியன் முஸ்லிம்களை அவமதிப்பதோடு, மலேசியாவையும் உட்பட பல நாடுகளில் உணர்ச்சி புண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய பேச்சுகள் சர்வதேச உறவுகளை பாதிக்கக் கூடும் என்றும், உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
“மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால் இவ்வாறான அவமதிப்புகளுக்கு மௌனம் காக்க முடியாது. விஸ்மா புத்ரா மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து, அமெரிக்க தூதரை வெளியேற்ற வேண்டும்,” என அவர் கூறினார்.
மேலும், இஸ்லாமை எதிரியாகச் சித்தரிக்கும் பேச்சுகளை மறுக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்றும், பிற இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



