குர்-ஆனை காலால் மிதித்த மாணவருடன் Firdaus Wong தொடர்பு!
- THINAGAREN SANGGAREN
- 03 Mar, 2026
மார்ச் 3,
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குரானை காலால் மிதித்து புகைப்படத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சர்ச்சைக்குரிய மத போதகர் Firdaus Wong சம்மந்தப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்ததாக வெளிவந்த செய்தியை Firdaus Wong ஒப்புக்கொண்டார். சம்மந்தப்பட்ட மாணவர் இந்துவாகப் பிறந்தாலும் கடந்த ஆண்டு இஸ்லாத்திற்கு மதம் மாறுவதற்காக தன்னிடம் அறிவுரை கேட்டதாக Firdaus Wong தெரிவித்தார்.
விக்னேஸ்வரன் எனும் தனது பெயரை இஸ்லாமிய முறைப்படி பெயர் மாற்றம் செய்யவிருப்பதாகவும் இஸ்லாத்தைப் பற்றி தன்னிடம் நுணுக்கமாகக் கேட்டறிந்ததாகவும் Firdaus Wong தெரிவித்தார். நான் அவருக்கு Muhammad Zain எனும் பெயரைப் பரிந்துரை செய்தேன். உண்மையில் அந்த மாணவர் நல்லவர் என Firdaus Wong தெரிவித்தார். அந்த மாணவர் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அதனால் இடைநிலைப்பள்ளியில் பயிலும் போது இஸ்லாமிய ஆசிரியருடன் பழகியதாகவும் அப்போதிலிருந்து இஸ்லாத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு இஸ்லாத்திற்கு மதம் மாறியதாகவும் அவருடைய கதையைத் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் Firdaus Wong தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி
25 ஆம் நாள் கே.விக்னேஸ்வரன் எனும் பகாங் பல்கலைக்கழக மாணவர் குர்-ஆனை காலால் மிதிக்கும்படியானப்
புகைப்படத்தைச் சமூகவலைத்தலத்தில் பகிர்ந்தார். அவருடைய புகைப்படம் சமூகவலைத்தலங்களில்
பரவியதை அடுத்து விக்னேஸ்வரனின் தந்தை காவல் நிலையத்தில் அவருடைய மகனை ஒப்படைத்த நிலையில்
இன்று காலை குவாந்தான் நீதிமன்றத்தில் முதல் விசாரணைக்காக 21 வயது விக்னேஸ்வரன் அழைத்து
வரப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



