25 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் மீண்டும் Track World Cup

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஆக 22: 25 வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மலேசியாவில் டிராக் உலகக் கோப்பை மீண்டும் நடைபெறும் என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஏப்ரல் 24 முதல் 26 வரை நெகிரி செம்பிலானில் உள்ள நீலாய் நகரில் உள்ள தேசிய வேலோட்ரோமில் நடைபெற உள்ளது.

இன்று, 2026 டிராக் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றை நடத்துவதற்கு சர்வதேச சைக்ளிங் அமைப்பான UCI -யிடமிருந்து மலேசியா அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெற்றுள்ளதாக மலேசிய தேசிய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவர் அமர்ஜித் சிங் கில் தெரிவித்தார்.

இந்த வலுவான ஆதரவிற்காக அரசாங்கத்திற்கும், குறிப்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கும், மலேசியாவின் மீது வைக்கப்பட்டுள்ள  நம்பிக்கைக்காக UCIக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

இந்த சாம்பியன்ஷிப் நாட்டிலும் ஆசிய பிராந்தியத்திலும் சைக்கிள் ஓட்டுதல் விளையாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி பெறுவதற்கான முக்கிய தளமாக இது செயல்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *