தோல்விக்குப் பிறரைக் குறைசொல்வதை நிறுத்துங்கள் – ரபிசிக்கு வலியுறுத்து
- Surendran Sumdraraj
- 04 Apr, 2026
கோலா லம்பூர், ஏப். 4-
கொள்கை அமலாக்கத் தோல்விகளுக்காகப் பிறரைக் குறைசொல்வதை நிறுத்தி, மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க தன்னிலையாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, PKR முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பகாங் மாநில மஜ்லிஸ் பிம்பினான் நெகரி (MPN) பிரிவு தலைவர் மைக்கல் சியா தெரிவித்ததாவது, ரபிசி முன்பு முன்னெடுத்த திட்டங்கள் மற்றும் முயற்சிகள் குறித்து வெளிப்படையான மற்றும் நேர்மையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்பதாகும்.
அவர் மேலும் கூறுகையில், அரசு நிதியாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து இன்னும் பல கேள்விகள் பதிலின்றி உள்ளன என்றார். அந்த நிதி மக்கள் வாழ்க்கையில் உண்மையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நீண்ட காலமாக கூறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் அரசியல் பேச்சுக்கள், மக்கள் வாழ்க்கையில் கணிசமான மாற்றமாக மாறவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதனால், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



