பலூன் வாயுவால் பறிக்கப்பட்ட உயிர்! கெடாவில் சோகம்
- Shan Siva
- 22 May, 2026
கோலாலம்பூர், மே 22: நேற்று இரவு கெடாவின் சுங்கை பெட்டானியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் கண்காட்சித் தளத்தில், பலூன்களை நிரப்பப் பயன்படுத்தப்பட்ட ஹீலியம் எரிவாயுத் தொட்டி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இரவு 7.50 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், கடுமையான வயிற்றுக் காயங்கள் மற்றும் கை முறிவு ஏற்பட்ட நிலையில், குளிர்பான விற்பனையாளரான 42 வயது அஸ்மி அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 7.52 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிப்பறைக்கு அருகில் இருந்த தொட்டியிலிருந்து சிதறிய குண்டுத் துண்டுகள் அஸ்மி மீது பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



